sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கவர்னர் தமிழிசையின் சமூக வலைதளம் முடக்கம்

/

கவர்னர் தமிழிசையின் சமூக வலைதளம் முடக்கம்

கவர்னர் தமிழிசையின் சமூக வலைதளம் முடக்கம்

கவர்னர் தமிழிசையின் சமூக வலைதளம் முடக்கம்


ADDED : ஜன 18, 2024 02:21 AM

Google News

ADDED : ஜன 18, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத், தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசையின் சமூக வலைதளமான 'எக்ஸ்' தளத்தை, மர்ம நபர்கள் முடக்கினர்.

தமிழிசை சவுந்தரராஜனின், 'எக்ஸ்' சமூகவலை தள பக்கத்தை 6.55 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். கடந்த 14ம் தேதி மத்திய இணை அமைச்சர் முருகன் வீட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியை அதில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் மர்ம நபர்கள், கவர்னர் தமிழிசையின் எக்ஸ் தள பக்கத்தை முடக்கி உள்ளனர். அவரது முகப்புப் படத்தையும், நீக்கி உள்ளனர்.

முடக்கப்பட்ட பக்கத்தை மீட்கும் முயற்சியில், கவர்னர் மாளிகை தொழில்நுட்ப பிரிவினர் ஈடுபட்டனர். எனினும், இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, ஹைதராபாத் போலீசில் தெலுங்கானா கவர்னர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்படி, 'சைபர் கிரைம்' போலீசார், கவர்னர் தமிழிசையின் சமூக வலைதளத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us