sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமெரிக்கா 50% வரி விதிப்பு; பருத்தி இறக்குமதிக்கு டிச.,31 வரை வரி விலக்கு அளித்தது மத்திய அரசு

/

அமெரிக்கா 50% வரி விதிப்பு; பருத்தி இறக்குமதிக்கு டிச.,31 வரை வரி விலக்கு அளித்தது மத்திய அரசு

அமெரிக்கா 50% வரி விதிப்பு; பருத்தி இறக்குமதிக்கு டிச.,31 வரை வரி விலக்கு அளித்தது மத்திய அரசு

அமெரிக்கா 50% வரி விதிப்பு; பருத்தி இறக்குமதிக்கு டிச.,31 வரை வரி விலக்கு அளித்தது மத்திய அரசு

8


ADDED : ஆக 28, 2025 10:24 AM

Google News

8

ADDED : ஆக 28, 2025 10:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், பாதிப்பை எதிர்கொள்ளும் ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக, பருத்தி இறக்குமதிக்கு டிசம்பர் 31 வரை வரி விலக்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

அமெரிக்கா இந்தியா பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தி உள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பால் ஜவுளி துறை கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இந்த சூழலில் ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக, மேலும் மூன்று மாதங்களுக்கு பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பருத்தி இறக்குமதிக்கு டிசம்பர் 31 வரை வரி விலக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக இறக்குமதி வரி விலக்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கை நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு பலனை அளிக்கும். உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரி விலக்கு உள்நாட்டு சந்தையில் பருத்தி கிடைப்பதை அதிகரிக்கும். பருத்தி விலையை உறுதிப்படுத்தும். இதன் மூலம் ஜவுளிப் பொருட்கள் மீதான பணவீக்க அழுத்தத்தைக் குறைக்கும்.

இது உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும், ஜவுளித் துறையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். இந்திய ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி போட்டித்தன்மையை ஆதரிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us