ADDED : ஆக 25, 2011 06:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர் : வலுவான ஜன் லோக்பால் மசோதா அமல்படுத்த வேண்டி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேவிற்கு, பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஓருங்கிணைந்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர். அதன் சார்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச அளவில், 11 மில்லியன் இந்தியர்கள் சர்வதேச நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும், அன்னா ஹசாரேவிற்கு ஆதரவாக உள்ளோம் என்றும், அவரது போராட்டம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று அவருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.