ADDED : நவ 01, 2024 06:59 AM
பெங்களூரு: 'இன்று கன்னட ராஜ்யோத்சவா விழாவில் பங்கேற்கும் அதிகாரிகள், அடையாள அட்டையுடன் மஞ்சள் - சிவப்பு நிற டேக்கை அணிய வேண்டும்' என அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா உதய நாள் மற்றும் 50ம் ஆண்டு பொன் விழா, மாநிலம் முழுதும் இன்று கொண்டாடப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கர்நாடகா மாநிலம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனவே, இம்முறை கன்னட ராஜ்யோத்சவ விழாவை கோலாகலமாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் விழாக்களில் பங்கேற்கும் அதிகாரிகள், தங்களின் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள டேக்கை, 'மஞ்சள் - சிவப்பு' நிறமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூரு, நவ. 1-
கர்நாடகா உதய நாள் மற்றும் 50ம் ஆண்டு பொன் விழா, மாநிலம் முழுதும் இன்று கொண்டாடப்படுகிறது.
இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கர்நாடகா மாநிலம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனவே, இம்முறை கன்னட ராஜ்யோத்சவ விழாவை கோலாகலமாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் விழாக்களில் பங்கேற்கும் அதிகாரிகள், தங்களின் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள டேக்கை, 'மஞ்சள் - சிவப்பு' நிறமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

