sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாடு முழுவதும் டோல்கேட்டில் செயற்கைக்கோள் மூலம் கட்டணம் வசூலா? மத்திய அரசு விளக்கம்

/

நாடு முழுவதும் டோல்கேட்டில் செயற்கைக்கோள் மூலம் கட்டணம் வசூலா? மத்திய அரசு விளக்கம்

நாடு முழுவதும் டோல்கேட்டில் செயற்கைக்கோள் மூலம் கட்டணம் வசூலா? மத்திய அரசு விளக்கம்

நாடு முழுவதும் டோல்கேட்டில் செயற்கைக்கோள் மூலம் கட்டணம் வசூலா? மத்திய அரசு விளக்கம்


ADDED : ஏப் 18, 2025 05:16 PM

Google News

ADDED : ஏப் 18, 2025 05:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சுங்கக்சாவடிகளில் செயற்கைக்கோள் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் உள்ளன. இங்கு ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, 2021ம் ஆண்டு பிப். முதல் பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டது.

கோடிக்கணக்கானோர் இந்த நடைமுறையை பயன்படுத்தி வரும் தருணத்தில், செயற்கைக்கோள் மூலமாக இனி கட்டணம் வசூலிக்கப்படும். மே 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், சுங்கக்சாவடிகளில் செயற்கைக்கோள் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அளித்து உள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது;

மே 1, 2025 முதல் நாடு தழுவிய அளவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கச்சாவடியை செயல்படுத்துவது தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமோ அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமோ (NHAI) அத்தகைய எந்த முடிவும் எடுக்கவில்லை.

சுங்கச்சாவடிகள் வழியாக வாகனங்கள் தடையின்றி, தடையின்றி பயணிக்க உதவும் வகையிலும், பயண நேரத்தைக் குறைக்கும் வகையிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் ' ANPR-FASTag-அடிப்படையிலான தடையற்ற கட்டண முறை' செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us