sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மொபைல் போன் திருடிய பட்டதாரி வாலிபர் பிடிபட்டார்

/

மொபைல் போன் திருடிய பட்டதாரி வாலிபர் பிடிபட்டார்

மொபைல் போன் திருடிய பட்டதாரி வாலிபர் பிடிபட்டார்

மொபைல் போன் திருடிய பட்டதாரி வாலிபர் பிடிபட்டார்


ADDED : ஆக 17, 2025 10:04 PM

Google News

ADDED : ஆக 17, 2025 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:வேலை செய்த, 'இ - காமர்ஸ்' நிறுவனத்தில் விலை உயர்ந்த மொபைல் போன்களை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டு, இரண்டு 'ஐ - போன்'கள், ஒரு விலை உயர்ந்த மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டன.

தென்மேற்கு டில்லி சாகர்பூரில் உள்ள இ - காமர்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தவர் பிலால் என்ற மணீஷ் குமார். இந்த நிறுவனத்தில் விலை உயர்ந்த மொபைல் போன்கள் மாயமாகின.

இதுகுறித்து, நிறுவனம் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நிறுவன ஊழியரான உத்தம் நகர் மோகன் கார்டனைச் சேர்ந்த பிலால் என்ற மணீஷ் குமாரை கைது செய்து, இரண்டு ஐ - போன்கள் மற்றும் ஒரு விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கண்காணிப்புக் கேமராக்களின் மின்சார இணைப்புகளைத் துண்டித்து விட்டு, மொபைல் போன்களை திருடியதை மணீஷ் குமார் ஒப்புக் கொண்டார்.

எம்.பி.ஏ., பட்டதாரியான மணீஷ் குமார், 10 மாதங்களுக்கு முன் இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us