பாட்டி விறகு வெட்டிய போது அரிவாள் பட்டு பேரன் இறப்பு
பாட்டி விறகு வெட்டிய போது அரிவாள் பட்டு பேரன் இறப்பு
ADDED : ஏப் 24, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம், ஏப். 24 -
கேரளாவில், 80 வயது பாட்டி விறகு வெட்டும் போது, பக்கத்தில் சென்ற பேரன் தலையில் அரிவாள் வெட்டு விழுந்து இறந்தான்.
கேரள மாநிலம், கண்ணுார் அருகே ஆலக்கோடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு - கிருஷ்ணன்-பிரியா தம்பதியின், ஒன்றரை வயது மகன் தயாள்.
பிரியாவின் தாய் நாராயணி, 80, என்பவர், வீட்டின் முன் அரிவாளால் விறகு வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு விளையாடி கொண்டிருந்த பேரன் தயாள், பாட்டியின் அருகே சென்றான். நாராயணிக்கு ஒரு கண் பார்வை இல்லை.
இதனால், பேரன் அருகில் வந்ததை கவனிக்காத அவர், விறகை வெட்டும் போது, பேரனின் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில், பலத்த காயம் அடைந்த பேரன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தான்.
ஆலக்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

