வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட்
UPDATED : பிப் 17, 2024 06:00 PM
ADDED : பிப் 17, 2024 05:36 PM

ஸ்ரீஹரிகோட்டா: ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட்ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், வானிலை நிலவரம், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய, 'இன்சாட் - 3டிஎஸ்' செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இதன் எடை, 2,274 கிலோ.
இதை சுமந்து கொண்டு, ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.,17) மாலை, 5:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இது, ஜி.எஸ்.எல்.வி., வகையில், 16வது ராக்கெட் ஆகும். தொடர்ந்து, புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.
இதன் பிறகு பேசிய சோம்நாத், செயற்கைக்கோள் திட்டம் வெற்றி பெற்றது. அனைவருக்கும் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.