ADDED : பிப் 03, 2026 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கடந்த மாதம், நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி., வசூல் 6.20 சதவீதம் உயர்ந்து 1.93 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே, கடந்த மூன்று மாதங்களில் அதிகபட்ச வரி வசூல் ஆகும். கடந்தாண்டு ஜனவரியில் ஜி.எஸ்.டி., வருவாய் 1.82 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த ஜனவரியில், உள்நாட்டு பணப் பரிவர்த்தனைகளில் இருந்து கிடைக்கும் வரி வருவாய் 4.80 சதவீதம் அதிகரித்து 1.41 லட்சம் கோடி ரூபாயாகவும்; இறக்குமதி வரி வருவாய் 10.10 சதவீதம் உயர்ந்து 52,253 கோடி ரூபாயாகவும் இருந்தது. மொத்தம் 22,665 கோடி ரூபாய்க்கு ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த மாதத்துக்கான ஜி.எஸ்.டி., வசூல் ஐந்து சதவீதம் அதிகரித்து 6,618 கோடி ரூபாயாக உள்ளது.

