sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜி.டி.தேவகவுடா கூறியது சரிதான்! சதீஷ் ஜார்கிஹோளி வக்காலத்து

/

ஜி.டி.தேவகவுடா கூறியது சரிதான்! சதீஷ் ஜார்கிஹோளி வக்காலத்து

ஜி.டி.தேவகவுடா கூறியது சரிதான்! சதீஷ் ஜார்கிஹோளி வக்காலத்து

ஜி.டி.தேவகவுடா கூறியது சரிதான்! சதீஷ் ஜார்கிஹோளி வக்காலத்து


ADDED : அக் 04, 2024 12:12 AM

Google News

ADDED : அக் 04, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''எப்.ஐ.ஆர்., பதிவானவுடன், யாரும் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா கூறியது சரிதான். இதையே அனைவரும் பின்பற்ற வேண்டும்,'' என பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.

டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

எப்.ஐ.ஆர்., பதிவானவுடன், ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், மத்திய அமைச்சரவையில் இருக்கும் 25 பேர் ராஜினாமா செய்ய வேண்டும். மாநிலங்களில் அமைச்சராக பதவி வகிக்கும், 300க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.

இவர்கள் மீது வழக்குகள் உள்ளன. அவர்கள் பதவியில் நீடிக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், முதல்வர் சித்தராமையாவிடம், ராஜினாமா கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

சிறப்பு அர்த்தம்


ஜி.டி.தேவகவுடா கூறியிருப்பது, உண்மையான வார்த்தைகள். பா.ஜ., - ம.ஜ.த.,வில் உள்ள பலரின் கருத்து இதுதான். ஜி.டி.தேவகவுடா தனக்கு பிரச்னை ஏற்படும் என்பதால், இதுபோன்று பேசியதாக கருத வேண்டியது இல்லை. அவர் பேசியதற்கு சிறப்பு அர்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள, எதிர்க்கட்சி தலைவர் அசோக், முதலில் ராஜினாமா செய்யட்டும். அதன்பின் முதல்வர் சித்தராமையாவிடம், ராஜினாமா கேட்கட்டும்.

பெங்களூரில் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மக்கள் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினோம். இதில் தனிப்பட்ட விஷயங்கள் இல்லை. அனைவரும் ஒன்று சேர்ந்தோம். உணவருந்தினோம், ஆலோசனை நடத்தினோம். காங்கிரசில் பிளான் பி என, எதுவும் இல்லை. பிளான் ஏ மட்டுமே.

பணிகள் ஆய்வு


நான் அவ்வப்போது டில்லிக்கு வருவது குறித்து, சிலர் விமர்சிக்கின்றனர். என் மகள் பிரியங்கா எம்.பி.,யாக இருக்கிறார். அரசியலில் அவர் அதிகம் வளர வேண்டும். அவருக்கு வழிகாட்ட, நான் டில்லிக்கு வருகிறேன்.

இங்குள்ள சூழ்நிலைக்கு அவரை பழக்கப்படுத்துகிறேன். அதுமட்டுமின்றி, கர்நாடக பவனில் நடக்கும் பணிகளையும், ஆய்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் மேலிட தலைவர்கள், ஹரியானா சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்களை சந்திக்க வாய்ப்பிருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

சலவாதி நாராயணசாமி எதிர்ப்பு

யாத்கிரில், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி:முதல்வர் சித்தராமையாவும், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வான ஜி.டி.தேவகவுடாவும், தசரா நிகழ்ச்சி நடக்கும் மேடையை, அரசியலுக்கு பயன்படுத்தியுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் ஜி.டி.தேவகவுடா அப்படி பேசியிருக்க கூடாது.முதல்வர் சித்தராமையா, எந்த தவறும் செய்யவில்லை என்கிறார். அரசியல் பேச அதுதான் மேடையா. நான் யாரையும் குற்றம்சாட்டவில்லை. தசரா நிகழ்ச்சி துவக்க மேடையை, அரசியலுக்கு பயன்படுத்த கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us