குரு பூர்ணிமா: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குவிந்த பக்தர்கள்
குரு பூர்ணிமா: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குவிந்த பக்தர்கள்
UPDATED : ஜூலை 21, 2024 08:53 PM
ADDED : ஜூலை 21, 2024 12:46 PM

புட்டபர்த்தி: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் குரு பவுர்ணமியை ஒட்டி, நாடு முழுவதும் இருந்து சத்யசாய் பாபாவின் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
நிகழ்ச்சிகள்
ஆண்டுதோறும் குரு பவுர்ணமியை ஒட்டி ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த வகையில் இந்தாண்டும் இன்று சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. காலை 8:00 மணிக்கு வேதம், பிரசாந்தி பஜனை குழு சார்பில் 8:20 மணிக்கு குரு வந்தனா ஆகியவற்றுடன் நிகழ்ச்சிகள் துவங்கின.
அன்பு
காலை 9:00 மணிக்கு ஸ்ரீசத்ய சாய் மத்திய அறக்கட்டளை டிரஸ்டி எஸ்எஸ் நாகானந்த் வரவேற்புரை ஆற்றுகையில், சத்யசாய் போதனைகளையும், பகவத் கீதையின் முக்கிய அம்சங்களை மேற்கோள் காட்டி பேசினார்.
அவர் பேசியதாவது: குருபூர்ணிமா என்பது நமது குருவுக்கு நன்றி செலுத்த நமக்கு கிடைத்த சந்தர்பம் ஆகும். குருவே படைப்பாளி ஆகும் போது, குருகுலம் அற்புதமான வடிவம் எடுக்கும். அங்கு எந்தவித நுழைவுத் தேர்வும் இல்லாமல், அனைவரின் ஆர்வம் தூண்டிவிடப்படும். இதற்கு ஒரே தகுதி அன்பு மட்டுமே. சத்யசாய்பாபாவின் போதனைகளையும், அவர் காட்டிய பாதைகளையும் பக்தர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
9:10 மணிக்கு ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் அகில இந்திய தலைவர் நிமிஸ் பாண்டியா உரை ஆற்றினார்.
சேவை திட்டம்
சிறப்புரை
9:20 க்கு தெய்வீக சொற்பொழிவு; 10:00 க்கு பஜனை, தீபாராதனை நடைபெற்றது.
ரஞ்சனி காயத்திரி குழுவின் இசை நிகழ்ச்சி
மாலை 4:30 க்கு வேதம்; 5:00க்கு, ரஞ்சனி காயத்திரி குழுவின் ஆன்மிக இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.5:45 க்கு பஜனை, தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.