sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

/

ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

10


ADDED : ஜூலை 17, 2025 06:09 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 06:09 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா தொடர்புடைய ரூ.37.64 கோடி மதிப்பிலான 43 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. மேலும் அவர் மற்றும் 10 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு பிப்., 12ல் குருகிராமின் ஆன்கரேஸ்வர் நிறுவனத்திடம் இருந்து வத்ராவுக்கு சொந்தமான நிறுவனம் 3.53 ஏக்கர் நிலத்தை வாங்கியது. இதில் மோசடி நடந்ததாக கடந்த 2018ம் ஆண்டு செப்., 1ம் தேதி குருகிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலம் தவறான வாக்குறுதிஅளித்து வாங்கப்பட்டு பிறகு, வாத்ராவின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக வணிக ரீதியிலான லைசென்ஸ் பெறப்பட்டதாக அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.

இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில், சொத்துகளை முடக்க நேற்று( ஜூலை 16) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் வாத்ராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான 43 அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.37.64 கோடியாகும்.

மேலும், இந்த வழக்கில், ரோஸ் அவென்யூ., நீதிமன்றத்தில் வாத்ராவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வாத்ரா உள்ளிட்ட11 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.






      Dinamalar
      Follow us