ஹனகல் கற்பழிப்பு வழக்கு மகளிர் ஆணையத்துக்கு அறிக்கை
ஹனகல் கற்பழிப்பு வழக்கு மகளிர் ஆணையத்துக்கு அறிக்கை
ADDED : ஜன 18, 2024 05:14 AM
ஹாவேரி: ஹனகல் கற்பழிப்பு வழக்கு தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையத்துக்கு, கர்நாடகா டி.ஜி.பி., அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
ஹாவேரி ஹனகல்லில் வேறு மதத்தை சேர்ந்த ஆண் நண்பருடன் லாட்ஜில் தங்கி இருந்த முஸ்லிம் பெண்ணை, அவரது சமூகத்தை சேர்ந்த வாலிபர்கள், சரமாரியாக தாக்கியதுடன், அவரை காரில் கடத்திச் சென்று, கூட்டு பலாத்காரம் செய்தனர்.
இதுகுறித்து ஹனகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏழு பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த, மேலும் ஒருவர் கோவாவில் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, கர்நாடகா டி.ஜி.பி., அலோக் மோகனுக்கு, தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் வழக்கு தொடர்பான அறிக்கையை, தேசிய மகளிர் ஆணையத்திடம், டி.ஜி.பி., நேற்று தாக்கல் செய்துள்ளார்.