உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜன 11, 2024 11:41 PM
அ நிறம் | அளவு
யாத்கிர்: யாத்கிர், குருமட்கலின், அனபுரா கிராமத்தில் உள்ள உயர்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் ஹனுமேகவுடா. இவர், 10ம் வகுப்பு மாணவியரிடம், அநாகரிகமாக நடந்து கொண்டார்.
இவரது தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்ததால், மாணவியர் தங்கள் பெற்றோரிடம் கூறினர். கொதிப்படைந்த அவர்கள், மாவட்ட பஞ்சாயத்திடம் புகார் அளித்தனர்.
இதை தீவிரமாக கருதிய மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரி, தலைமை ஆசிரியர் ஹனுமேக வுடாவை சஸ்பெண்ட் செய்து, நேற்று உத்தரவிட்டார்.
