டில்லியில் கடும் பனிமூட்டம் எதிரொலி; இன்று 150க்கும் மேற்பட்ட விமானங்கள், 50 ரயில்கள் ரத்து
டில்லியில் கடும் பனிமூட்டம் எதிரொலி; இன்று 150க்கும் மேற்பட்ட விமானங்கள், 50 ரயில்கள் ரத்து
ADDED : டிச 20, 2025 04:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நமது டில்லி நிருபர்
டில்லியில் இன்று (டிசம்பர் 20) கடும் பனி காரணமாக, 150க்கும் மேற்பட்ட விமானங்களும், 50க்கும் மேற்பட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் தொடர்ந்து கடும் பனிமூட்டம் சூழ்ந்திருந்ததால், விமானம், ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தலைநகர் டில்லியிலும் இன்று கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது .
இதனால், 150க்கும் மேற்பட்ட விமானங்களும், 50க்கும் மேற்பட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. பல விமானங்கள் புறப்பாடு, வருகையில் தாமதமும் ஏற்பட்டது.
விமான நிலையத்திற்கு பயணிகள் புறப்படுவதற்கு முன்பு, விமானம் புறப்பாடு நிலவரத்தை விமான நிறுவனங்களின் இணையத்தில் சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

