ADDED : ஜூன் 27, 2025 02:57 AM
மூணாறு:கேரளாவில் நாளை மறுநாள் (ஜூன் 29) வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்த இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச், எல்லோ ஆகிய 'அலர்ட்' டுகளை விடுத்தது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று மதியம் வெளியிட்ட அறிக்கையில் மாநிலத்தில் ஜூன் 29 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறி பல்வேறு அலர்ட்டுகளை விடுத்தது.
ஆரஞ்ச் அலர்ட்: இன்று இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கும் நாளை இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார் மாவட்டங்களுக்கும் கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
எல்லோ அலர்ட் : இன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும், நாளை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, காசர்கோடு மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள் (ஜூன் 29) இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார் மாவட்டங்களுக்கும் பலத்த மழைக்கான ' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

