sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; குழந்தை உட்பட 7 பேர் பலி

/

உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; குழந்தை உட்பட 7 பேர் பலி

உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; குழந்தை உட்பட 7 பேர் பலி

உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; குழந்தை உட்பட 7 பேர் பலி

5


UPDATED : ஜூன் 15, 2025 05:19 PM

ADDED : ஜூன் 15, 2025 08:45 AM

Google News

UPDATED : ஜூன் 15, 2025 05:19 PM ADDED : ஜூன் 15, 2025 08:45 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டேராடூன்: உத்தரகண்டில் கேதார்நாத் தாமில் இருந்து சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில், விமானி மற்றும் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.



உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் தாமில் இருந்து குப்தகாஷிக்கு சென்று கொண்டிருநு்த ஆர்யன் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் கவுரிகுண்ட் காடுகளில் விழுந்து நொறுங்கியது. இந்த ஹெலிகாப்டரில் விமானி மற்றும் குழந்தை உட்பட 7 பேர் பயணித்துள்ளனர்.

கேதார்நாத் தாமில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு குப்தாஷிக்கு ஹெலிகாப்டர் திரும்பி கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். மீட்புபடையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் விமானி மற்றும் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர். உத்தரகண்ட், உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

முதல்வர் வருத்தம்

இது குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிக்கை: ருத்ரபிரயாக் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து மிகவும் சோகமான செய்தி கிடைத்துள்ளது. மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



ரத்து
இந்நிலையில், சர்தாம் யாத்திரை மேற்கொள்ள ஆர்யன் ஏவியேஷன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இரண்டு விமானிகளின் லைசென்ஸ், ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.








      Dinamalar
      Follow us