sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் 3 மாதங்கள் அவகாசம் நீட்டிப்பு

/

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் 3 மாதங்கள் அவகாசம் நீட்டிப்பு

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் 3 மாதங்கள் அவகாசம் நீட்டிப்பு

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் 3 மாதங்கள் அவகாசம் நீட்டிப்பு


ADDED : பிப் 15, 2024 04:49 AM

Google News

ADDED : பிப் 15, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : ''வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்த வழங்கப்பட்ட கால அவகாசம் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும்,'' என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.எல்.சி., மதுவின் கேள்விக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, சட்ட மேலவையில் நேற்று பதிலளித்து பேசியதாவது:

ஏப்ரல் 2019க்கு முன் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில், எச்.எஸ்.ஆர்.பி., எனும் உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்துவது கட்டாயம்.

மாநிலத்தில் 2023 ஆகஸ்ட் 18, முதல் இம்மாதம் 12ம் தேதி வரை, மொத்தம் 18,32,787 வாகனங்களில் எச்.எஸ்.ஆர்.பி., பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து மாநிலங்களிலும் உயர் பாதுகாப்பு பதிவு பலகைகள் பொருத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் மாநிலத்திலும் பலகைகள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 2019க்கு முன் மாநிலத்தில் 2.45 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், இதுவரை 9.16 சதவீத வாகனங்களில் எச்.எஸ்.ஆர்.பி., பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. வாகன உரிமையாளர்கள் ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்தி, வாகனங்களில் பதிவு எண் பலகை பொருத்துவதற்கு வசதியான இடம் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்ப்பதற்கும் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளரால் பொருத்தப்படுகிறது. மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கி விரைவில் உத்தரவிடப்படும்.

எச்.எஸ்.ஆர்.பி., பதிவு எண் பலகை பொருத்தா விட்டால், முதல் முறை 500 ரூபாயும்; இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த முறைகளுக்கு, தலா 1,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.






      Dinamalar
      Follow us