sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எரிபொருள் தீர்ந்ததால் வயலில் தரையிறங்கிய வெப்ப பலுான்

/

எரிபொருள் தீர்ந்ததால் வயலில் தரையிறங்கிய வெப்ப பலுான்

எரிபொருள் தீர்ந்ததால் வயலில் தரையிறங்கிய வெப்ப பலுான்

எரிபொருள் தீர்ந்ததால் வயலில் தரையிறங்கிய வெப்ப பலுான்


ADDED : ஜன 17, 2025 11:33 PM

Google News

ADDED : ஜன 17, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; பாலக்காடு அருகே எரிபொருள் தீர்ந்ததால், பலுான் வயலில் தரையிறங்கியது.

தமிழக சுற்றுலாத்துறை, குளோபல் மீடியா பாக்ஸ் சார்பில், 10வது தமிழ்நாடு சர்வதேச வெப்ப பலுான் திருவிழா, பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் கடந்த, 13ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.

அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரியா, வியட்நாம், பெல்ஜியம் உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து, 12 பலுான்கள் இந்தத் திருவிழாவிற்காக வந்துள்ளன. இந்த நிலையில் திருவிழாவின் நிறைவு நாளில் வானில் பறந்த வெப்ப பலுான்களில் ஒன்றில், எரிபொருள் தீர்ந்ததால், பாலக்காடு மாவட்டம் வடவன்னுார் வட்டச்சிறை என்ற பகுதியில் உள்ள உதயன் என்பவரின் வயல் நிலத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்த பலுானில் வெளிநாட்டை சேர்ந்த பைலட்டும், சென்னையை சேர்ந்த தாயும்; மகளும் இருந்தனர். பின் தொடர்ந்து வந்த வாகனத்தில் பலுான் ஏற்றி செல்லப்பட்டது.

திருவிழாவின் துவக்க நாளிலும், இதேபோல் எரிபொருள் தீர்ந்து வெப்ப பலுான் பாலக்காடு மாவட்டம் பெருமாட்டி கன்னிமாரி முள்ளன்தோடு என்ற பகுதியில் உள்ள, ராமன்குட்டி என்பவர் வயலில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us