sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மஹாராஷ்டிராவில் சாய ஆலையில் பயங்கர தீ விபத்து: பல மீட்டர் உயரம் எரிந்த தீ ஜூவாலை

/

மஹாராஷ்டிராவில் சாய ஆலையில் பயங்கர தீ விபத்து: பல மீட்டர் உயரம் எரிந்த தீ ஜூவாலை

மஹாராஷ்டிராவில் சாய ஆலையில் பயங்கர தீ விபத்து: பல மீட்டர் உயரம் எரிந்த தீ ஜூவாலை

மஹாராஷ்டிராவில் சாய ஆலையில் பயங்கர தீ விபத்து: பல மீட்டர் உயரம் எரிந்த தீ ஜூவாலை


ADDED : செப் 06, 2025 06:43 AM

Google News

ADDED : செப் 06, 2025 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிவாண்டி: மஹாராஷ்டிராவில் சாய ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:

தானே மாவட்டம் பிவாண்டி அருகே கமத்கார் என்ற பகுதி உள்ளது. இங்கு பெரிய சாய ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று (செப்.6) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ மெல்ல, மெல்ல வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. பல மீட்டர் உயரத்துக்கு காணப்பட்ட தீ ஜூவாலைகளால் அப்பகுதியே வெப்பத்தில் தகித்தது. மின்சார வினியோகமும் முற்றிலும் தடைபட்டது.

தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினரும், உள்ளூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பல மீட்டர் உயரம் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர்.

சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதற்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும், மின்கசிவே காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us