sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனைவி ஜடையை வெட்டிய கணவர்; வரதட்சணை கொடுமை புகாரில் கைது

/

மனைவி ஜடையை வெட்டிய கணவர்; வரதட்சணை கொடுமை புகாரில் கைது

மனைவி ஜடையை வெட்டிய கணவர்; வரதட்சணை கொடுமை புகாரில் கைது

மனைவி ஜடையை வெட்டிய கணவர்; வரதட்சணை கொடுமை புகாரில் கைது

3


ADDED : ஏப் 21, 2025 03:21 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 03:21 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ : உத்தர பிரதேசத்தில் அழகு நிலையத்துக்கு சென்ற மனைவியின் தலைமுடி, ஜடை பின்னலை கத்தரிக்கோலால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

உ.பி.,யின் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் பிரதாப். இவருக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. மனைவி அடிக்கடி அழகு நிலையம் சென்று, தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் பழக்கம் கொண்டவர்.

வழக்கம்போல, நேற்று முன்தினம் அழகு நிலையத்துக்கு அவர் சென்றபோது, சிறிது நேரத்தில் அங்கு வந்த ராம் பிரதாப், அங்கிருந்த கத்தரிக்கோலை எடுத்து, மனைவியின் தலைமுடி, ஜடை பின்னலை வெட்டி வீசினார்.

இந்த சம்பவத்தை அறிந்த ராம் பிரதாப்பின் மாமனார் ராதாகிருஷ்ணன், போலீசில் புகார் அளித்தார். அதில், 'ராம் பிரதாப் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு என் மகளை கடந்த ஓராண்டாக கொடுமைப்படுத்தி வந்தனர்.

'பிரிஜ், ஏர்கூலர் போன்ற வீட்டு உபயோக பொருட்களை எங்கள் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி என் மகளை சித்ரவதை செய்தனர். 'அதன் உச்சகட்டமாக, அழகு நிலையத்துக்கே சென்று, என் மகளின் தலைமுடியை ராம் பிரதாப் வெட்டியுள்ளார். அவருடன் மூன்று பேர் சென்றுள்ளனர்' என கூறினார். இதன்படி வழக்குப்பதிவு செய்து, ராம் பிரதாபை போலீசார் கைது செய்தனர்.

ராம் பிரதாப் வீட்டின் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் கூறுகையில், 'அடிக்கடி அழகு நிலையத்துக்கு மனைவி செல்வதால் ராம் பிரதாப் கோபத்தில் இருந்தார். நேற்று முன்தினம் புருவத்தை அழகுபடுத்துவதற்காக, அழகு நிலையத்துக்கு மனைவி சென்றதை அறிந்ததும், ஆத்திரத்தில் ஜடையை வெட்டியுள்ளார்' என்றனர்.

மாறுபட்ட தகவல்களால், குழப்பமடைந்த போலீசார் உண்மையான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us