sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனைவியை அடித்து கொன்ற கணவர் சரண்

/

மனைவியை அடித்து கொன்ற கணவர் சரண்

மனைவியை அடித்து கொன்ற கணவர் சரண்

மனைவியை அடித்து கொன்ற கணவர் சரண்


ADDED : மார் 19, 2025 09:14 PM

Google News

ADDED : மார் 19, 2025 09:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அத்திப்பள்ளி; நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில், சப்பாத்தி கட்டையால் அடித்து காதல் மனைவியை கொலை செய்த கணவர், போலீசில் சரண் அடைந்தார்.

பெங்களூரு ரூரல் அத்திப்பள்ளி அருகே ராச்சமனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் பாபு, 32. இவர், கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மைசூரின் அனிதா, 29, மற்றொரு பெண் என இருவரை காதலித்தார். இருவரையும் ஒரே நாளில் திருமணம் செய்தார். இரண்டு மனைவியருக்கும் தலா இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அனிதாவின் நடத்தையில், பாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து, உதைத்தார். இதனால் மனம் உடைந்த அனிதா, மூன்று மாதங்களுக்கு முன்பு பாபுவை பிரிந்து, சொந்த ஊரான மைசூரு சென்றார்.

இரு குடும்பத்தினரும் சமாதானம் பேசி கணவன் - மனைவியை கடந்த மாதம் சேர்த்து வைத்தனர். கடந்த 17ம் தேதி இரவும் மனைவி நடத்தையில், கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இரவு முழுவதும் சண்டையிட்டனர்.

நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு வீட்டில் இருந்த சப்பாத்தி கட்டையால், அனிதாவை, பாபு சரமாரியாக தாக்கினார். தலையில் பலத்த காயம் அடைந்த, அனிதா பரிதாபமாக இறந்தார்.

அதிர்ச்சி அடைந்த பாபு, மனைவி உடல் அருகில் அமர்ந்து இருந்தார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு அத்திப்பள்ளி போலீஸ் நிலையம் சென்று, சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us