sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹைதராபாதில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள் கைது

/

ஹைதராபாதில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள் கைது

ஹைதராபாதில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள் கைது

ஹைதராபாதில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள் கைது

1


ADDED : மே 20, 2025 02:54 AM

Google News

ADDED : மே 20, 2025 02:54 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: தெலுங்கானாவின் ஹைதராபாதில், பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுதும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக, ஆந்திரா - தெலுங்கானா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி விசாரணை நடத்திய இரு மாநில போலீசார், ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில், சிராஜ் உர் ரெஹ்மான், 29, என்பவரை கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின்படி, ஹைதராபாதைச் சேர்ந்த சையத் சமீர், 28, என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் தங்கியிருந்த வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படும் அமோனியா, சல்பர், அலுமினிய துாள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

விசாரணையில், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள தடை செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன், சிராஜ் உர் ரெஹ்மான், சையத் சமீர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், பாக்., பயங்கரவாத அமைப்புகளுடனும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹைதராபாதின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த, இவர்கள் சதித்திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய மேலும் பலர் கைதாகலாம் என, தெரிகிறது.






      Dinamalar
      Follow us