ADDED : மார் 14, 2024 10:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாவணகெரே, - பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா தாவணகெரேயில் நேற்று அளித்த பேட்டி:
தாவணகெரே பா.ஜ., வேட்பாளர்களை தேர்வு செய்ய, கட்சி நடத்திய இரண்டு சர்வேயிலும், எனக்கே அதிக ஆதரவு இருந்தது. ஆனால் மேலிட தலைவர்களிடம், எம்.பி., சித்தேஸ்வர் பொய் கூறி, அவரது மனைவிக்கு 'சீட்' வாங்கி கொடுத்து உள்ளார்; போக்கிரித்தனம் செய்கிறார்.
எனக்கும் போக்கிரித்தனம் செய்ய தெரியும். தாவணகெரே வேட்பாளரை மாற்ற வேண்டும். பல ஆண்டுகளாக பா.ஜ.,வில் உள்ளேன். எடியூரப்பாவுடன் உள்ள கருத்து வேறுபாட்டை சரி செய்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

