sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நான் மனிதன் தான்; கடவுள் அல்ல 'பாட்காஸ்ட்' நிகழ்வில் பிரதமர் பேச்சு

/

நான் மனிதன் தான்; கடவுள் அல்ல 'பாட்காஸ்ட்' நிகழ்வில் பிரதமர் பேச்சு

நான் மனிதன் தான்; கடவுள் அல்ல 'பாட்காஸ்ட்' நிகழ்வில் பிரதமர் பேச்சு

நான் மனிதன் தான்; கடவுள் அல்ல 'பாட்காஸ்ட்' நிகழ்வில் பிரதமர் பேச்சு

1


ADDED : ஜன 11, 2025 12:13 AM

Google News

ADDED : ஜன 11, 2025 12:13 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: “தவறுகள் நடப்பது இயல்பு தான். எல்லாரும் தவறு செய்வர். நானும் செய்துள்ளேன். நான் என்ன கடவுளா? சாதாரண மனிதன் தானே,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

'ஆன்லைன்' வாயிலாக கேட்கப்படும் ஒலி தொடர்கள், 'பாட்காஸ்ட்' என்று அழைக்கப்படுகின்றன. பிரபலங்களில் துவங்கி, சாமானியர் வரை பலரும் தங்களுக்கென்று தனியாக பாட்காஸ்ட் துவக்கி பல்வேறு கருத்துக்களை பகிர்கின்றனர்.

அந்த வகையில், பங்கு வர்த்தகம் மற்றும் நிதி சேவைகள் துறையில் முன்னணி வகிக்கும், 'ஜீரோதா' நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான நிகில் காமத் நடத்தி வரும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்று பேசினார்.

வழக்கத்துக்கு மாறாக, அரசியல் அதிகம் இல்லாமல் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பிரதமர் மனம் திறந்துள்ளார்.

அதில், பிரதமர் மோடி பேசிய முக்கிய அம்சங்கள்:

ஆரம்ப பள்ளியில் படிக்கும் போது, என் வீட்டில் இருப்பவர்களின் துணிகளை நான் தான் துவைப்பேன். அப்போது தான் குளத்துக்கு செல்ல அனுமதி கிடைக்கும். அங்கு ஆனந்தமாக நீச்சல்அடிப்பேன்

அரசியல்வாதியாக இருப்பது வேறு, வெற்றிகரமான அரசியல்வாதியாக இருப்பது வேறு. 'நான் எல்லாருக்கும் மேலானவன், நான் சொல்வதை அனைவரும் பின்பற்றுவர்' என்ற நினைப்பு இருப்பவர் அரசியலில் இருக்கலாம்.

ஆனால், வெற்றிகரமாக இருக்க முடியுமா என்பது தெரியாது. மக்களுடன் மக்களாக இருப்பவரே அரசியலில் வெற்றி பெற முடியும்

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் அரசியல்வாதி ஆகவில்லை. சிலர் மட்டுமே அரசியலுக்கு வந்து சாதித்தனர். அரசியலுக்கு வர குறிக்கோள் மட்டும் இருந்தால் போதாது, தெளிவான திட்டம் வேண்டும்

கடந்த 2002, என் வாழ்நாளில் மிக கடுமையான நாட்கள். கோத்ரா கலவரம் வெடித்தபோது நான் எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்று மூன்று நாட்கள் மட்டுமே ஆகியிருந்தன.

கோத்ராவுக்கு செல்ல முயற்சித்தேன். ஒற்றை இன்ஜின் ஹெலிகாப்டர் மட்டுமே அங்கு இருந்தது. அதில், வி.ஐ.பி.,யை அழைத்து செல்ல மறுத்துவிட்டனர். நான் வி.ஐ.பி., இல்லை என அவர்களுடன் சண்டையிட்டு, கோத்ரா சென்றடைந்தேன்

தேர்தலில் போட்டியிடுவது, அதிகாரத்தை பிடிப்பது மட்டுமே அரசியல் அல்ல; அது ஒரு அம்சம் மட்டுமே.

ஒருவர் கொள்கை வகுப்பதில் ஈடுபட்டால் உண்மையான மாற்றத்தை கொண்டு வர முடியும். அரசியல் தொடர்புடைய கொள்கை வகுப்பாளராக இருந்தால் நாடு முழுதும் மாற்றத்தை கொண்டு வர முடியும்

தேர்தலில் போட்டியிட பணம் முக்கியமில்லை. என் சிறு வயதில், கண் மருத்துவர் ஒருவர், மக்களிடம் இருந்து ஆளுக்கு 1 ரூபாய் நன்கொடை பெற்று தேர்தலில் போட்டியிட்டதை பார்த்துள்ளேன்

கடந்த 2005ல், நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது எனக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. இந்திய விசாவுக்காக பலரும் வரிசையில் நிற்கும் நாள் வரும் என, நான் அப்போது கூறினேன். இன்றைக்கு இந்தியாவின் நேரம் துவங்கிவிட்டது

தவறு செய்வது மனித இயல்பு. நானும் தவறுகள் செய்திருக்கிறேன். தவறு செய்யாதிருக்க நான் ஒன்றும் கடவுள் அல்ல; மனிதன் தானே. ஆனால் என் தவறுகளுக்கு பின்னால் கெட்ட நோக்கம் இருக்காது.

இவ்வாறு பிரதமர் பேசினார்.






      Dinamalar
      Follow us