sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

''மோடி பிரதமராக இருக்கும் வரை எங்களை யாராலயும் பிரிக்க முடியாது'': சொல்கிறார் சிராக் பஸ்வான்

/

''மோடி பிரதமராக இருக்கும் வரை எங்களை யாராலயும் பிரிக்க முடியாது'': சொல்கிறார் சிராக் பஸ்வான்

''மோடி பிரதமராக இருக்கும் வரை எங்களை யாராலயும் பிரிக்க முடியாது'': சொல்கிறார் சிராக் பஸ்வான்

''மோடி பிரதமராக இருக்கும் வரை எங்களை யாராலயும் பிரிக்க முடியாது'': சொல்கிறார் சிராக் பஸ்வான்

1


ADDED : ஆக 30, 2024 03:28 PM

Google News

ADDED : ஆக 30, 2024 03:28 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: ''நரேந்திர மோடி மீதான எனது அன்பு அசைக்க முடியாதது. அவர் பிரதமராக இருக்கும் வரை என்னை அவரிடம் இருந்து பிரிக்க முடியாது'' என லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.

பீஹாரில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகனான சிராக் பஸ்வான், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவராக உள்ளார். லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி, ஐந்திலும் வென்றது. சிராக் பஸ்வானுக்கு மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. வக்பு வாரிய சட்டத்திருத்தம், உயர் பதவிகளில் லேட்டரல் என்ட்ரி முறை உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை கூட்டணிக்குள் இருந்தாலும் விமர்சித்து வந்தார். இதனால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவார் என பல்வேறு யூகங்கள் கிளம்பின.

இது பற்றி சிராக் பஸ்வான் கூறியதாவது: நரேந்திர மோடி மீதான எனது அன்பு அசைக்க முடியாதது. அவர் பிரதமராக இருக்கும் வரை என்னை அவரிடம் இருந்து பிரிக்க முடியாது. எனது கருத்துக்கள் எப்போதும் அரசின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றன. வக்பு வாரிய மசோதாவை பார்லி., கூட்டு குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறியது அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. எங்கள் கட்சி பீஹார் மாநிலத்திலும், மத்தியிலும் பா.ஜ., உடன் கூட்டணியில் உள்ளது. எனவே, தேசிய அளவிலும், மாநிலத்திலும் நாங்கள் கூட்டணி தர்மத்தைக் கடைபிடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us