sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நான் அரசியல் சன்னியாசி அல்ல பி.சி.பாட்டீல்

/

நான் அரசியல் சன்னியாசி அல்ல பி.சி.பாட்டீல்

நான் அரசியல் சன்னியாசி அல்ல பி.சி.பாட்டீல்

நான் அரசியல் சன்னியாசி அல்ல பி.சி.பாட்டீல்


ADDED : ஜன 30, 2024 07:57 AM

Google News

ADDED : ஜன 30, 2024 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாவேரி, : ''நான் அரசியல் சன்னியாசி அல்ல. கட்சி முடிவு செய்தால், மத்திய அரசியலுக்கு செல்வேன்,'' என பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் பி.சி.பாட்டீல் தெரிவித்தார்.

ஹாவேரியில் நேற்று அவர் கூறியதாவது:

ஹாவேரி லோக்சபா தொகுதியில், யார் வேட்பாளர் என்பதை, பா.ஜ., மேலிடம் முடிவு செய்யும். ஏற்கனவே தொகுதியில் ஆய்வு நடக்கிறது. ஆய்வறிக்கை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.

மேலிடம் யாருக்கு சீட் கொடுத்தாலும், அவருக்காக பணியாற்றுவோம். பா.ஜ., வேட்பாளரை வெற்றி பெற வைப்பதில், நாங்கள் கைகோர்ப்போம். நான் அரசியல் சன்னியாசி அல்ல. கட்சி முடிவு செய்தால், மத்திய அரசியலுக்கு செல்வேன்.

முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், மீண்டும் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். ராகு காலம் என, கூறுவார்களே, அதுபோன்று கெட்ட நேரத்தில் அவருக்கு அநியாயம் ஏற்பட்டுவிட்டது. இதை சரி செய்வதாக உறுதியளித்து, அவரை மேலிட தலைவர்கள் கட்சிக்கு அழைத்து வந்துள்ளனர். ஷெட்டர் அனுபவம் மிக்க அரசியல்வாதி. அவர் வந்ததால், பா.ஜ.,வின் சக்தி அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us