sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை

/

லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை

லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை

லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை

24


ADDED : மார் 26, 2025 02:32 PM

Google News

ADDED : மார் 26, 2025 02:32 PM

24


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' லோக்சபாவில் என்னை பேச அனுமதிக்கவில்லை'', என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார். அதேநேரத்தில் அவையில் விதிகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொள்ள வேண்டும் என சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.

இடமில்லை

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: பார்லிமென்டில் என்ன நடக்கிறது என புரியவில்லை. லோக்சபாவில் பேசுவதற்கு நான் வாய்ப்பு கேட்டேன். ஆனால், வாய்ப்பு வழங்காமல் கிளம்பி சென்று விட்டார். அவர் என்னைப் பற்றி ஆதாரமற்ற ஒன்றைச் சொன்னார். தேவையில்லாமல் லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது. லோக்சபாவில் பேச எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி வழங்குவது வழக்கம். எப்போது எல்லாம் நான் எழுந்து நின்றாலும், நான் பேசுவதை தடுக்கின்றனர். இதனால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக அமர்ந்துள்ளேன். 7-8 நாட்களாக பேச அனுமதிக்கப்படவில்லை. இங்கு ஜனநாயகத்திற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடமில்லை. மஹா கும்பமேளா குறித்தும், வேலைவாய்ப்பின்மை குறித்தும் பேச விரும்பினேன். ஆனால் அனுமதிக்கப்படவில்லை. சபாநாயகரின் அணுகுமுறை குறித்து புரியவில்லை. ஆனால், நாங்கள் பேச அனுமதிக்கப்படவில்லை. என்றார்.

எதிர்பார்ப்பு


இது தொடர்பாக லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: இந்த சபையின் புனிதத்தன்மை மற்றும் உயர்ந்த மரியாதையை நீங்கள்( ராகுல்) நிலைநிறுத்துவீர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பல எம்.பி.,க்களின் நடவடிக்கை அவ்வாறு இல்லை என்பதற்கு பல சம்பவங்கள் உள்ளன. தந்தைகள், மகள்கள், தாயார்கள், மனைவி மற்றும் கணவன் இந்த சபையின் உறுப்பினர்களாக இருந்து உள்ளனர். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் விதிப்படி நடக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us