sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'அமித்ஷாவை போல் இருக்க விரும்புகிறேன்'

/

'அமித்ஷாவை போல் இருக்க விரும்புகிறேன்'

'அமித்ஷாவை போல் இருக்க விரும்புகிறேன்'

'அமித்ஷாவை போல் இருக்க விரும்புகிறேன்'


ADDED : ஏப் 10, 2025 08:44 PM

Google News

ADDED : ஏப் 10, 2025 08:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்ரம்நகர்:“மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் போல இருக்க விரும்புகிறேன். அவர் துணிச்சலான ஆளுமை. என்னுடைய இரண்டாவது வழிகாட்டி, அமித்ஷா,” என, முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.

டில்லி தலைமைச் செயலகத்தில் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி:

பிரதமர் நரேந்திர மோடியை ஒரு துறவியாகக் கருதும் அதே வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் போல இருக்க விரும்புகிறேன். அவர் துணிச்சலான ஆளுமை. என்னுடைய இரண்டாவது வழிகாட்டி, அமித்ஷா. அமித் ஷா நாட்டிற்காக பல பெரிய முடிவுகளை ஒருபோதும் தயங்காமல் எடுத்துள்ளார்.

எங்கள் கட்சியில் தங்கள் சொந்த வழிகளில் நாட்டிற்கு சேவை செய்வதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பலர் உள்ளனர். அவர்களில் நிதின் கட்கரியும் அமித் ஷாவும் ஒருவர்.

ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பது பழமொழி. ஆனால் இதற்கு நேர்மாறாகவும் இருக்கலாம். என் வாழ்க்கையையும் வெற்றியை வடிவமைப்பதில் முக்கிய சக்தியா என் கணவர் திகழ்கிறார்.

முதல்வராக பதவியேற்றதில் இருந்து குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. என் மகன், மகளுடன் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே என்னால் பேச முடிகிறது.

என் குடும்பத்தினருக்காக என்னால் சமைக்க முடியவில்லை. முன்பு என் கணவருடன் மணிக்கணக்கில் பேசுவேன். ஆனால் இப்போது தொடர்ந்து என்னால் 10 நிமிடங்கள் கூட பேச முடியவில்லை.

என் அரசியல் வாழ்க்கைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கியதற்காக என் பெரிய கூட்டுக்குடும்பத்திற்கு கடன்பட்டுள்ளேன்.

ஆண்டு முழுவதும் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு புதுமையான தீர்வை நாங்கள் செயல்படுத்த உள்ளோம்.

முன்பு தண்ணீர் தெளிப்பான்கள் குளிர்காலத்தில் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே செயல்படும். பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு, காற்று மாசுபாடு இரண்டு மாதங்கள் மட்டும் இருக்கும் ஒரு பிரச்னை அல்ல. அது ஆண்டு முழுவதும் இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.

எனவே தண்ணீர் தெளிப்பான்களை ஆண்டு முழுவதும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். ரிங் ரோடுகளில் உள்ள தெருவிளக்கு கம்பங்களில் தண்ணீர் தெளிப்பான்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம்.

250 மாநகராட்சி வார்டுகளிலும் தலா நான்கு என, 1,000 தெளிப்பான்களை பொதுப்பணித்துறை ஆண்டு முழுவதும் பயன்படுத்தும்.

எங்கள் கொள்கைகள் மற்றும் முயற்சிகளில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எனவே முடிவுகளும் தெளிவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us