sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாகிஸ்தானுக்கு தண்ணீர் போகணுமா: பஞ்சாப் முதல்வரை கேட்கிறார் ஹரியானா முதல்வர்!

/

பாகிஸ்தானுக்கு தண்ணீர் போகணுமா: பஞ்சாப் முதல்வரை கேட்கிறார் ஹரியானா முதல்வர்!

பாகிஸ்தானுக்கு தண்ணீர் போகணுமா: பஞ்சாப் முதல்வரை கேட்கிறார் ஹரியானா முதல்வர்!

பாகிஸ்தானுக்கு தண்ணீர் போகணுமா: பஞ்சாப் முதல்வரை கேட்கிறார் ஹரியானா முதல்வர்!

1


ADDED : ஏப் 30, 2025 02:22 PM

Google News

ADDED : ஏப் 30, 2025 02:22 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: ''பக்ரா அணை காலி செய்யப்படாவிட்டால் கூடுதல் தண்ணீர் பாகிஸ்தானுக்கு செல்லும். தேச நலனுக்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் செயல்பட வேண்டும்'' என ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் நயாப் சிங் சைனி கூறியதாவது: பஞ்சாப் முதல்வர் பக்வந்த் சிங் மான் தனது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு ஹரியானாவிற்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மழைக்காலங்களில் மழைநீரை சேமிக்க ஜூன் மாதத்திற்கு முன்பு பக்ரா அணை நீர்த்தேக்கத்தை காலி செய்வது அவசியம். பக்ரா அணை காலி செய்யப்படாவிட்டால் கூடுதல் தண்ணீர் பாகிஸ்தானுக்குத்தான் செல்லும். தேச நலனுக்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் செயல்பட வேண்டும்.

பக்வந்த் சிங் மான், குறுகிய கண்ணோட்டங்களுக்கு அப்பால் உயர்ந்து, நாட்டின் நலனுக்காக, ஹரியானாவிற்கு சரியான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். பக்ரா அணையின் நிலவரம் குறித்து அவர்கள் விளக்கவில்லை.ராஜஸ்தான், பஞ்சாப், டில்லி மற்றும் ஹரியானா அரசாங்கங்கள் எல்லா நேரங்களிலும் ஒவ்வொரு சொட்டு நீரையும் கண்காணிக்கின்றன.

அரசியல் சுயநலத்திற்காக, அவர் உண்மைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஹரியானா மக்களை தவறாக வழிநடத்த முயன்றார். ஹரியானாவின் பங்கு நீரை தர மறுக்கின்றனர். டில்லியில் ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் இருந்த வரை, டில்லிக்கு தண்ணீர் அனுப்புவதில் பகவந்த் மான் எந்த ஆட்சேபனையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் இப்போது, ஆம் ஆத்மி கட்சி டில்லியில் தோற்றதால், டில்லி மக்களை தண்டிக்க அவர் இதைச் செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us