sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கரக்பூர் ஐ.ஐ.டி., மாணவர் துாக்கிட்டு தற்கொலை

/

கரக்பூர் ஐ.ஐ.டி., மாணவர் துாக்கிட்டு தற்கொலை

கரக்பூர் ஐ.ஐ.டி., மாணவர் துாக்கிட்டு தற்கொலை

கரக்பூர் ஐ.ஐ.டி., மாணவர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜன 14, 2025 12:45 AM

Google News

ADDED : ஜன 14, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தின் கரக்பூரில், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, கோல்கட்டாவைச் சேர்ந்த ஷான் மாலிக், 21, மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

விடுதியில் தங்கியிருந்த இவருக்கு, ஞாயிறு தோறும் அவரது பெற்றோர் வீட்டு உணவு சமைத்து எடுத்து வருவது வழக்கம்.

இதுபோல் ஷானை பார்க்க, நேற்று முன்தினம் அவரது பெற்றோர் வீட்டு உணவுடன் அவரது விடுதிக்கு வந்தனர். ஷானின் மொபைல் போன் எண்ணிற்கு பலமுறை தொடர்பு கொண்ட போதும், அவர்களின் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஷானின் பெற்றோர், உடனே கல்லுாரி விடுதி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

இதையடுத்து, ஷானின் அறைக்கு சென்றனர். அங்கு அறை கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டதால், அதை உடைத்து திறந்து பார்த்தபோது, அறையின் ஜன்னல் இரும்பு கம்பியில் ஷான் துாக்கிட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே, அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், ஷான் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us