sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட வழக்கு; ரூ. 110 கோடி சொத்து முடக்கம்

/

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட வழக்கு; ரூ. 110 கோடி சொத்து முடக்கம்

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட வழக்கு; ரூ. 110 கோடி சொத்து முடக்கம்

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட வழக்கு; ரூ. 110 கோடி சொத்து முடக்கம்


ADDED : ஆக 14, 2025 02:22 PM

Google News

ADDED : ஆக 14, 2025 02:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட வழக்கில் ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

சைப்ரஸ் நாட்டை சேர்ந்த சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளம் பரிமேட்ச் வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளமான பரிமேட்ச் வழக்கில் நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, மும்பை, டில்லி, நொய்டா, ஜெய்ப்பூர், சூரத், மதுரை, கான்பூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் 17 இடங்களில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனைகளின் போது, பல்வேறு குற்றவியல் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ. 110 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us