sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'முடா' வழக்கில் 8 இடங்களில்... 'ரெய்டு!' அமலாக்க துறை விசாரணை தீவிரம்

/

'முடா' வழக்கில் 8 இடங்களில்... 'ரெய்டு!' அமலாக்க துறை விசாரணை தீவிரம்

'முடா' வழக்கில் 8 இடங்களில்... 'ரெய்டு!' அமலாக்க துறை விசாரணை தீவிரம்

'முடா' வழக்கில் 8 இடங்களில்... 'ரெய்டு!' அமலாக்க துறை விசாரணை தீவிரம்


ADDED : அக் 29, 2024 07:29 AM

Google News

ADDED : அக் 29, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு,: 'முடா' முறைகேடு வழக்கு தொடர்பாக, பெங்களூரு, மைசூரு, மங்களூரு, மாண்டியா உட்பட எட்டு இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷின் ஆதரவாளர் வீட்டில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்த வழக்கில், அமலாக்கத் துறையினர் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

'முடா' எனும் மைசூரு நகர்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், நிலம் கையகப்படுத்தப்பட்டு, லே- அவுட்டுகள் அமைக்கப்படுகின்றன.

நிலம் கொடுத்தவர்களுக்கு 50 சதவீதம் பணம்; 50 சதவீதம் இடம் ஒதுக்கப்படுகிறது.

இந்த வகையில், முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, லோக் ஆயுக்தா மற்றும் அமலாக்க துறை ஆகிய அமைப்புகள் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றன.

இதற்கிடையில், முடா ஒதுக்கிய மனைகளை, பார்வதி திரும்ப ஒப்படைத்தார்.

இது தவிர, முடாவில் நிலம் ஒதுக்கீடு செய்ததில், 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக, எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறினர். இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தேசாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

ஆதரவாளர்


இந்நிலையில், முடா முறைகேட்டில் சட்டவிரோத பணப் பரிமாற்றமும் நடந்ததாக அமலாக்க துறையில், மைசூரை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் கங்கராஜு புகார் செய்தார்.

இதையடுத்து கடந்த 18, 19ம் தேதிகளில் மைசூரு முடா அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையில் சிக்கிய பல ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். முடா முறைகேட்டில் நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ் தீவிர ஆதரவாளரான, மஞ்சுநாத் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக, கங்கராஜு குற்றச்சாட்டு கூறியிருந்தார்.

'மாஜி' கமிஷனர்கள்


இந்நிலையில் நேற்று காலை பெங்களூரு ஜே.பி., நகரில் உள்ள மஞ்சுநாத்தின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதுபோல முடா முன்னாள் கமிஷனர்கள் தினேஷ்குமார், நடேஷ் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது, சில ஆவணங்களை அமலாக்க துறையினர் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, மாண்டியா, மங்களூரு உட்பட எட்டு இடங்களில் முடா முன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

கங்கராஜ் ஆஜர்


அமைச்சர் பைரதி சுரேஷ் ஆதரவாளர் மஞ்சுநாத், முடாவில் 50:50 திட்டத்தில் நிலம் வாங்கி, சமூக நல அமைச்சர் மஹா தேவப்பாவின் அண்ணன் மகன் நவீன் போஸ் என்பவருக்கு விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது.

சோதனையின் போது பறிமுதல் செய்த ஆவணங்களை அமலாக்க துறையினர் சரி பார்ப்பர். பின், சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையில், நேற்று காலை பெங்களூரில் உள்ள முடா அலுவலகத்திற்கு, புகார்தாரர் கங்கராஜ் வந்தார். அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகி, சில ஆவணங்களை சமர்ப்பித்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:

முடா முறைகேடு வழக்கில் எனது வாயை மூடும் முயற்சி நடக்கிறது. ஆனால் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன். முடா வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை நான் விடுவதாக இல்லை. விசாரணைக்கு ஆஜராகும்படி, கடந்த 22ம் தேதி மாலை எனக்கு அமலாக்க துறையிடமிருந்து சம்மன் வந்தது. 24ம் தேதி ஆஜராக கூறியிருந்தனர். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் அன்று வர முடியவில்லை. அதனால் இன்று விசாரணைக்கு ஆஜராகி ஆவணங்களை கொடுத்துள்ளேன்.

முடா முறைகேடு தொடர்பாக லோக் ஆயுக்தா நடத்தும் விசாரணையில் எனக்கு நம்பிக்கை இல்லை.

நியாயம் கிடைக்க ஒரே வழி சி.பி.ஐ., - அமலாக்கத் துறை விசாரணை மட்டும்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us