sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வருமான வரி மசோதா அறிக்கை இன்று தாக்கல்! ...: பெரும் பரபரப்புடன் கூடுகிறது பார்லிமென்ட்

/

வருமான வரி மசோதா அறிக்கை இன்று தாக்கல்! ...: பெரும் பரபரப்புடன் கூடுகிறது பார்லிமென்ட்

வருமான வரி மசோதா அறிக்கை இன்று தாக்கல்! ...: பெரும் பரபரப்புடன் கூடுகிறது பார்லிமென்ட்

வருமான வரி மசோதா அறிக்கை இன்று தாக்கல்! ...: பெரும் பரபரப்புடன் கூடுகிறது பார்லிமென்ட்

1


ADDED : ஜூலை 21, 2025 12:01 AM

Google News

1

ADDED : ஜூலை 21, 2025 12:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்துார் உட்பட பல பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் சூழலில், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், பெரும் பரபரப்புகளுக்கு இடையே இன்று துவங்குகிறது. முதல் நாளிலேயே, புதிய வருமான வரி மசோதா தொடர்பான பார்லிமென்ட் குழுவின் அறிக்கை தாக்கலாகிறது.

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று துவங்கி, ஆகஸ்ட் 21 வரை நடைபெறுகிறது.

கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. அதே போல், முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் மும்முரமாகி வருகின்றன.

தேர்வுக்குழு

கடந்த 1961ல் கொண்டு வரப்பட்ட வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக, புதிய வருமான வரி மசோதா பல திருத்தங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை, பட்ஜெட் கூட்டத் தொடரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக, பா.ஜ.,வைச் சேர்ந்த வைஜெயந்த் பாண்டா தலைமையில் 31 பேர் கொண்ட பார்லிமென்ட் தேர்வுக் குழுவை, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நியமித்தார். இக்குழு, மசோதாவை ஆராய்ந்து 285 யோசனைகளை முன்வைத்தது.

கடந்த 16ம் தேதி நடந்த கூட்டத்தில் அந்த யோசனைகள் ஏற்கப்பட்ட நிலையில், புதிய வருமான வரி மசோதா தொடர்பான பார்லிமென்ட் குழுவின் அறிக்கை இன்று தாக்கலாகிறது.

கடந்த 1961ல் கொண்டு வரப்பட்ட வருமான வரி சட்டத்தில் உள்ள பல அம்சங்கள் நீக்கப்பட்டு, பாதியாக சுருக்கப்பட்ட வடிவில் புதிய வருமான வரி மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

பழைய சட்டத்தில் 5.12 லட்சம் வார்த்தைகள் இடம் பெற்றிருந்த நிலையில், புதிய மசோதாவில் 2.6 லட்சம் வார்த்தைகளே இடம் பிடித்துள்ளன.

அதே போல், 819 பிரிவுகள் பழைய சட்டத்தில் இடம்பிடித்திருந்த நிலையில், அது 536 பிரிவுகளாக சுருக்கப்பட்டுஉள்ளது. பழைய சட்டத்தில் இருந்த 47 அத்தியாயங்கள், தற்போது 23 ஆக குறைகிறது.

வரி பிடித்தம்

வரி விலக்கு தொடர்பான ஷரத்துகளும் முன்பு இருந்ததை விட தற்போது புரியும் வகையில் சுருக்கப்பட்டுள்ளன. டி.டி.எஸ்., எனப்படும் முன்கூட்டியே வரி பிடித்தம் உள்ளிட்ட வரிகள் அட்டவணை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டில் ஈட்டப்பட்ட வருவாய்க்கான வரி அடுத்த ஆண்டில் செலுத்தப்பட்டு வருகிறது. இதை மதிப்பீட்டு ஆண்டு என குறிப்பிடப்படுகிறது. இந்த சொற்களும் புதிய வருமான வரி மசோதாவில் எளிமைப்படுத்தி, வரி ஆண்டு என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

'எதை பற்றியும் விவாதிக்க தயார்'

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடந்தது. பா.ஜ.,வைச் சேர்ந்த ராஜ்யசபா சபை முன்னவர் நட்டா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராகவே உள்ளது. ஆப்பரேஷன் சிந்துார் உட்பட முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படும். அதே நேரம் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, 'பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்திற்கு காரணம் யார்? ஆப்பரேஷன் சிந்துார் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுவது உண்மையா? மத்திய அரசு சொல்வது உண்மையா? என்பதை பிரதமர் மோடி பார்லிமென்டில் தெரிவிக்க வேண்டும்' என காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.



நீதிபதியை நீக்க தீர்மானம் தயார்

அலகாபாத் உயர் நீதிமற்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பண மூட்டை சிக்கிய விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:மழைக்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கொண்டு வரவுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக, 100க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் கையெழுத்திட்டுஉள்ளனர். தற்போதைக்கு இதற்கான காலக்கெடு நிர்ணயிக்கவில்லை. அது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டதும் முறைப்படி அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us