sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வருமான வரித்துறைக்கு அடுத்த ஆண்டு முதல் சுதந்திரம்! வரி ஏய்ப்பு செய்வோரின் டிஜிட்டல் தளங்களில் சோதனை

/

வருமான வரித்துறைக்கு அடுத்த ஆண்டு முதல் சுதந்திரம்! வரி ஏய்ப்பு செய்வோரின் டிஜிட்டல் தளங்களில் சோதனை

வருமான வரித்துறைக்கு அடுத்த ஆண்டு முதல் சுதந்திரம்! வரி ஏய்ப்பு செய்வோரின் டிஜிட்டல் தளங்களில் சோதனை

வருமான வரித்துறைக்கு அடுத்த ஆண்டு முதல் சுதந்திரம்! வரி ஏய்ப்பு செய்வோரின் டிஜிட்டல் தளங்களில் சோதனை

12


ADDED : மார் 05, 2025 06:33 AM

Google News

ADDED : மார் 05, 2025 06:33 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வரி ஏய்ப்பு அல்லது சொத்து விபரங்களை ஒருவர் மறைப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் சமூக வலைதள கணக்கு, இ - மெயில், வங்கிக் கணக்குகள், முதலீடு மற்றும் பங்கு வர்த்தகத்திற்கான, 'ஆன்லைன்' கணக்குகளை ஆய்வு செய்ய வருமான வரித்துறைக்கு அடுத்த ஆண்டு முதல் சட்டப்பூர்வமான உரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவு, 132ன் கீழ், ஒரு நபர் வரி ஏய்ப்பு நோக்கத்துடன் தன் வருமானம், சொத்துக்கள் அல்லது நிதி பதிவுகளை மறைப்பதாக நம்பகமான தகவல் இருந்தால், வரித்துறை அதிகாரிகள் சோதனைகள் மற்றும் பறிமுதல்களை மேற்கொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட நபர் கணக்கில் காட்டாத சொத்துக்கள் அல்லது நிதி பதிவுகளை மறைத்து வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் அவரது வீடு, பாதுகாப்பு பெட்டகம், வங்கி லாக்கர் உள்ளிட்டவற்றை உடைத்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.

நவீன மாற்றம்


தற்போது நிதி பரிவர்த்தனைகள், 'டிஜிட்டல்' மயமாகிவிட்டதால், வரித்துறை அதிகாரிகளின் விசாரணை முறை மற்றும் அதிகாரங்கள் நவீன மாற்றத்தை நோக்கி நகர்கின்றன. பார்லிமென்டில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவின்படி, வரி விசாரணைகளில் டிஜிட்டல் தடயவியல் இப்போது முக்கிய பங்கு வகிக்கிறது.

சர்ச்சையை கிளப்புமா?


இதன்படி, 2026, ஏப்., 1 முதல், வருமான வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணை, டிஜிட்டல் தளங்களுக்கும் விரிவடைகிறது. இந்த புதிய சட்டத்தின்படி ஒருவர் தன் வருமானம், முதலீடு அல்லது சொத்துக்கள் குறித்து முழுமையான தகவல்களை பகிரவில்லை என வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் சமூக வலைதள கணக்கு, இ - மெயில், வங்கிக் கணக்குகள்.

முதலீடு மற்றும் பங்கு வர்த்தகத்திற்கான ஆன்லைன் கணக்குகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்யலாம். புதிய வருமான வரி மசோதா இந்த அதிகாரத்தை அவர்களுக்கு அளிக்கிறது. இருப்பினும், இந்த மாற்றம் வரி ஏய்ப்பைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்குமா அல்லது தனியுரிமை தலையீடு என்ற சர்ச்சையை கிளப்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நியாயப்படுத்த முடியாது!


'கே.எஸ்., லீகல் அண்டு அசோசியேட்ஸ்' சட்ட நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் சோனம் சந்த்வானி கூறுகையில், ''புதிய வருமான வரி மசோதாவின்படி, ஒருவரின் டிஜிட்டல் தளத்திற்குள் வருமான வரித்துறையினர் நுழைந்து ஆய்வு செய்வது, அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை, அரசு அத்துமீறல் குறித்த குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்புகிறது.
வரி ஏய்ப்பு மற்றும் வெளியிடப்படாத டிஜிட்டல் சொத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை என அரசு நியாயப்படுத்தலாம். ஆனால், இது தனிநபரின் நிதி மற்றும் தனிப்பட்ட டிஜிட்டல் தகவல்களின் மீது கட்டுப்பாடற்ற கண்காணிப்பை அனுமதிக்கிறது,'' என்றார்.








      Dinamalar
      Follow us