sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராணுவ ஏற்றுமதி உயர்வு: ராஜ்நாத் சிங் பெருமிதம்

/

ராணுவ ஏற்றுமதி உயர்வு: ராஜ்நாத் சிங் பெருமிதம்

ராணுவ ஏற்றுமதி உயர்வு: ராஜ்நாத் சிங் பெருமிதம்

ராணுவ ஏற்றுமதி உயர்வு: ராஜ்நாத் சிங் பெருமிதம்


ADDED : ஏப் 02, 2025 08:49 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 08:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; 'நாட்டின் ராணுவ ஏற்றுமதி 2024 - -25ம் நிதியாண்டில், 23,622 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட 12.04 சதவீதம் அதிகம்' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:

கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், நாட்டின் ராணுவ ஏற்றுமதி ஏற்றுமதி, 21,083 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2024 - 25ம் நிதியாண்டில், 12.04 சதவீதம் அதிகரித்து, 23,622 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையின் கீழ், 2029க்குள் ராணுவ ஏற்றுமதியை, 50,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் இலக்கை அடைவதை நோக்கி நம் நாடு முன்னேறி வருகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2024 - -25ம் நிதியாண்டில், ராணுவ பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் ஏற்றுமதியில், 42.85 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இது, உலக சந்தையில் இந்திய தயாரிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும் தன்மை அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது.

'ராணுவ தளவாடங்களில், பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்திருந்த இந்தியா, தற்போது சுயசார்பு இந்தியாவாக மாறி, உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறி உள்ளது' என, ராணுவ அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us