sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போக்குவரத்து விதிமீறல் அதிகரிப்பு: துணை கமிஷனர்

/

போக்குவரத்து விதிமீறல் அதிகரிப்பு: துணை கமிஷனர்

போக்குவரத்து விதிமீறல் அதிகரிப்பு: துணை கமிஷனர்

போக்குவரத்து விதிமீறல் அதிகரிப்பு: துணை கமிஷனர்


ADDED : செப் 30, 2024 12:06 AM

Google News

ADDED : செப் 30, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : ''பெங்களூரில் மணிக்கு 5,687 போக்குவரத்து விதிமீறல்கள் சம்பவங்கள் நடக்கின்றன,'' என பெங்களூரு கிழக்கு மண்டல போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி:

பெங்களூரில் சாலை போக்குவரத்து விதிகளை மீறுவது, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

தற்போதைய புள்ளி - விபரங்களின் படி, மணிக்கு 5,687 போக்குவரத்து விதிமீறல் நடக்கிறது.

போக்குவரத்து சிக்னல்களில், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன பயணியரை, அடையாளம் காண்கிறது.

ஒவ்வொரு சந்திப்பிலும், 789 போக்குவரத்து விதிமீறல்கள் நடக்கின்றன. தவறான பாதையில் வாகனம் ஓட்டுவது குறித்து, அதிகமான வழக்குகள் பதிவாகின்றன. குறிப்பாக ஆடுகோடி, பனசங்கரி, பசவனகுடி, ஹலசூரு, ஜெயநகர், மல்லேஸ்வரம், மைகோ லே - அவுட், ஆர்.டி.நகர், சதாசிவநகர், வி.வி.புரம் உட்பட பல பகுதிகளில் போக்குவரத்து மீறுவோர் எண்ணிக்கை மிக அதிகம்.

அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கேமராக்கள் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிகின்றன. இது தவிர போலீசாரும் இயந்திரங்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்த இயந்திரங்கள் 2024 ஆகஸ்டில் 1.43 கோடி விதிமீறல் வழக்குகள் பதிவு செய்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us