sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வேற்றுமையில் ஒற்றுமைமிக்க நாடு இந்தியா; மோகன் பகவத்

/

வேற்றுமையில் ஒற்றுமைமிக்க நாடு இந்தியா; மோகன் பகவத்

வேற்றுமையில் ஒற்றுமைமிக்க நாடு இந்தியா; மோகன் பகவத்

வேற்றுமையில் ஒற்றுமைமிக்க நாடு இந்தியா; மோகன் பகவத்

3


ADDED : டிச 20, 2024 11:39 AM

Google News

ADDED : டிச 20, 2024 11:39 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புனே: வேற்றுமையில் ஒற்றுமைமிக்க நாடு இந்தியா என்றும், பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இங்கு இடமில்லை என்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

புனேவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நீண்ட காலமாக நாம் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இதனை உலக நாடுகளுக்கும் கொண்டு சென்றால், நம்முடைய நாடு தான் முன்மாதிரியான நாடாக திகழும். ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு, இந்து தலைவர்கள் இதுபோன்று பல்வேறு இடங்களில் செய்வார்கள் என்று சிலர் நினைக்கின்றனர். அது ஏற்றுக்க முடியாதது.

அயோத்தி ராமர் கோவில் இந்துக்களின் நம்பிக்கை. எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்னையை கிளப்புகிறார்கள். இதனை எப்படி அனுமதிக்கிறார்கள்? இது தொடர அனுமதிக்கக் கூடாது. நம்மால் ஒற்றுமையுடன் வாழ முடியும் என்பதை இந்தியா நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இந்தியர்கள் முன்பு செய்த தவறுகளை சரி செய்து விட்டு, உலக நாடுகளில் இந்தியாவை முன்மாதிரியான நாடாக மாற்ற பணியாற்ற வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நம்முடைய நாடு இயங்கி வருகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு வழிநடத்துகிறது. மேலாதிக்கத்தின் நாட்கள் முடிந்து விட்டது, எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us