sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியா - சிங்கப்பூர் உறவை வலுப்படுத்த 3வது வட்டமேசை மாநாட்டில் உறுதி

/

இந்தியா - சிங்கப்பூர் உறவை வலுப்படுத்த 3வது வட்டமேசை மாநாட்டில் உறுதி

இந்தியா - சிங்கப்பூர் உறவை வலுப்படுத்த 3வது வட்டமேசை மாநாட்டில் உறுதி

இந்தியா - சிங்கப்பூர் உறவை வலுப்படுத்த 3வது வட்டமேசை மாநாட்டில் உறுதி


ADDED : ஆக 14, 2025 12:13 PM

Google News

ADDED : ஆக 14, 2025 12:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியா - சிங்கப்பூர் இடையே இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில், மூன்றாவது வட்டமேசை மாநாடு டில்லியில் நேற்று நடந்தது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் - இந்தியா உறவை மேம்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள் இடையிலான இருதரப்பு பேச்சு நடந்தது.

இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடியால் முதல் சுற்று வட்டமேசை மாநாடு, 2022 செப்டம்பரில் டில்லியிலும், இரண்டாம் சுற்று வட்ட மேசை மாநாடு 2024 ஆகஸ்டில் சிங்கப் பூரிலும் நடந்தது.

இந்நிலையில், மூன்றாவது வட்டமேசை மாநாடு டில்லியில் நேற்று நடந்தது. இதில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதேபோல் சிங்கப்பூர் அரசு சார்பில், அந்நாட்டின் துணைப் பிரதமர் கான் கிம் யோங், உள்துறை அமைச்சர் சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜோசபின் டியோ, மனிதவள அமைச்சர் டான் சீ லெங், போக்குவரத்து அமைச்சர் ஜெப்ரி சியாவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இச்சந்திப்பின்போது தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், திறன் மேம்பாடு உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில், 'இந்த சந்திப்பு, இருநாடுகளின் உறவை விரிவுப்படுத்த வழிவகுக்கும். ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில், சிங்கப்பூர் அமைச்சர்களின் ஈடுபாடு, இருநாட்டின் அரசிற்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல உதவும்' என, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us