sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புதிய உச்சத்தில் இந்தியா - யு.ஏ.இ., உறவு துபாயில் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

/

புதிய உச்சத்தில் இந்தியா - யு.ஏ.இ., உறவு துபாயில் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

புதிய உச்சத்தில் இந்தியா - யு.ஏ.இ., உறவு துபாயில் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

புதிய உச்சத்தில் இந்தியா - யு.ஏ.இ., உறவு துபாயில் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு


ADDED : நவ 15, 2024 01:52 AM

Google News

ADDED : நவ 15, 2024 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய், நவ. 15-

நிதி சார்ந்த தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உள்கட்டமைப்பு, ராணுவம் உள்ளிட்ட துறைகளில், இந்தியா - யு.ஏ.இ., உறவு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் சென்றுள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சிம்பயாசிஸ் சர்வதேச நிகர்நிலை பல்கலையின் கிளையை துபாயில் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

இந்தியா - யு.ஏ.இ., உறவு இன்றைக்கு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த, 2015ல் பிரதமர் மோடி யு.ஏ.இ., வந்தார். இந்த நுாற்றாண்டில் இந்திய பிரதமர் யு.ஏ.இ., வருவது இதுவே முதல்முறை. அந்த பயணத்தின் வாயிலாக, இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவு வேகம் எடுத்தது.

உலகளாவிய பணியிடத்துக்கு இந்தியா இன்று தயாராக வேண்டும்.

அதே நேரத்தில், 'சிப்'கள் தயாரிப்பு, மின்னணு வாகன போக்குவரத்து, சுத்தமான பசுமை தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளிலும் சாதிக்க தயாராகி வருகிறது. இந்த சாத்தியக்கூறுகளின் வளர்ச்சியை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும், சந்தைக்கு ஏற்றதாகவும் மாற்றுவதன் வாயிலாக நிர்வகிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us