sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஈரான் கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்: கப்பலை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை

/

ஈரான் கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்: கப்பலை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை

ஈரான் கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்: கப்பலை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை

ஈரான் கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்: கப்பலை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை

4


ADDED : ஜன 29, 2024 11:55 PM

Google News

ADDED : ஜன 29, 2024 11:55 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சோமாலியா கிழக்கு கடற்கரை பகுதியில், ஈரான் கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பலை கடற்கொள்ளையர் கடத்தினர். அந்த கப்பலில் இருந்தவர்கள் உதவி கோரியதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற நம் கடற்படையின் போர்க்கப்பல், கொள்ளையரிடம் இருந்து கப்பல் மற்றும் பணியாளர்களை பாதுகாப்பாக காப்பாற்றியது.

சோமாலியா கிழக்கு கடற்கரை பகுதியில், ஈரான் கொடியுடன், 17 பேருடன் மீன்பிடிக் கப்பல் சென்றது. அப்போது அங்கு வந்த கடற்கொள்ளையர், கப்பலை கடத்தியதுடன், அதிலிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.

அவர்கள் அவசர உதவி கோரியதை அடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, நம் விமானப்படையின் ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல், சம்பவ இடத்துக்கு விரைந்து, கடற்கொள்ளையரிடம் இருந்து கப்பல் மற்றும் அதிலிருந்தவர்களை காப்பாற்றியது.

இதுகுறித்து, நம் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் நேற்று கூறியதாவது:

சோமாலியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில், கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கைகளில், ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல் ஈடுபட்டது. அப்போது, ஈரான் கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பல் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது.

இதன்படி, சம்பவ இடத்துக்கு விரைந்த ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பலில் இருந்த அதிகாரிகள், கப்பலையும், அதிலிருந்த 17 பேரையும் பாதுகாப்பாக காப்பாற்றினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை கப்பல் கடத்தல்?

சோமாலியாவுக்கு கிழக்கே, சர்வதேச கடல் பகுதியில், கடந்த 27ம் தேதி, இலங்கையின் மீன்பிடிக் கப்பல் கடத்தப்பட்டது. இதில், ஆறு பேர் இருந்தனர். இந்த கப்பலை, சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர் கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக, அந்நாட்டு அரசுடன், இலங்கை அதிகாரிகள் பேசி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us