sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியப் பெருங்கடல் பகுதி பாதுகாப்பு என்பது நமது கடமை; அஜித் தோவல்

/

இந்தியப் பெருங்கடல் பகுதி பாதுகாப்பு என்பது நமது கடமை; அஜித் தோவல்

இந்தியப் பெருங்கடல் பகுதி பாதுகாப்பு என்பது நமது கடமை; அஜித் தோவல்

இந்தியப் பெருங்கடல் பகுதி பாதுகாப்பு என்பது நமது கடமை; அஜித் தோவல்

2


ADDED : நவ 20, 2025 02:27 PM

Google News

2

ADDED : நவ 20, 2025 02:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை அதனையொட்டியுள்ள நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தவும், அதனையொட்டியுள்ள நாடுகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

டில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடந்த இந்த அமைப்பின் 7வது மாநாட்டில் இலங்கை மற்றும் வங்கதேசம், மாலத்தீவு, மொரிசியஸ் ஆகிய உறுப்பு நாடுகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். செஷல்ஸ் பார்வையாளர் நாடாகவும், மலேசியா விருந்தினர் நாடாகவும் பங்கேற்றன.

இந்தக் கூட்டத்தில் அஜித் தோவல் பேசியதாவது; இந்தியப் பெருங்கடல் என்பது நமது மிகப்பெரிய பாரம்பரியமாகும். இதனை பாதுகாப்பது என்பது நமது கடமை. இந்தியப் பெருங்கடலின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை, அதனையொட்டியுள்ள நாடுகள் உறுதி செய்ய வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us