sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சோதனை ஆய்வுக்கூடம் இந்தியா: பில்கேட்ஸ் கருத்தால் சர்ச்சை

/

சோதனை ஆய்வுக்கூடம் இந்தியா: பில்கேட்ஸ் கருத்தால் சர்ச்சை

சோதனை ஆய்வுக்கூடம் இந்தியா: பில்கேட்ஸ் கருத்தால் சர்ச்சை

சோதனை ஆய்வுக்கூடம் இந்தியா: பில்கேட்ஸ் கருத்தால் சர்ச்சை

35


ADDED : டிச 04, 2024 04:49 AM

Google News

ADDED : டிச 04, 2024 04:49 AM

35


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான பில்கேட்ஸ், 69, சமீபத்தில், 'பாட்காஸ்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது பில்கேட்ஸ் கூறியதாவது: இந்தியாவில் உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவை மேம்பட்டு வருகின்றன. அங்கு அனைத்தும் நிலையாக உள்ளதால், போதுமான வருவாய் கிடைக்கிறது. அடுத்த 20 ஆண்டுகளில் அந்நாட்டில் உள்ள மக்கள் வியத்தகு முறையில் முன்னேறி இருப்பர்.

புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும் ஆய்வுக்கூடமாக இந்தியா விளங்குகிறது. அங்கு நிரூபணமான பின், ஒரு விஷயத்தை மற்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார். பில்கேட்சின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

'இந்தியர்களான நாம், பில்கேட்சுக்கு விலங்குகள் போல தெரிகிறோம். அதனால் ஒரு புதிய விஷயத்தை நம் மீது பரிசோதிக்க அவர் விரும்புகிறார். 'முறையான உரிமம் இல்லாமல், அவரது அலுவலகம் நம் நாட்டில் இயங்குகிறது. நம் கல்வி முறை அவரை ஹீரோவாக்கி விட்டது. எப்போது விழிப்போம் என தெரியவில்லை' என, பலரும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us