இண்டிகோ விமான சேவை ரத்து விவகாரத்துக்கு தீர்வு; நிலைமை விரைவில் சீராகும் என மத்திய அரசு அறிவிப்பு
இண்டிகோ விமான சேவை ரத்து விவகாரத்துக்கு தீர்வு; நிலைமை விரைவில் சீராகும் என மத்திய அரசு அறிவிப்பு
UPDATED : டிச 05, 2025 04:34 PM
ADDED : டிச 05, 2025 03:45 PM

புதுடில்லி: இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை 3ம் நாளாக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓரிரு நாளில் நிலைமை சீராகும் என தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறையை காரணம் கூறி, 'இண்டிகோ' நிறுவனம் தொடர்ந்து நுாற்றுக்கணக்கான விமானங்களை கடந்த மூன்று நாட்களாக ரத்து செய்து வருவதால், ஆயிரக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.3வது நாளாக இன்றும் (டிச.,05) நூற்றுக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்தது. இன்று 750க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
டில்லியில் 225 விமானங்கள், மும்பையில் 104 விமானங்கள், பெங்களூருவில் 102 விமானங்கள், ஐதராபாத்தில் 92 விமானங்கள், ஜெய்ப்பூரில் 34 விமானங்கள், புனேவில் 32 விமானங்கள், சென்னையில் 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் விமான நிலையத்தில், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே, விமான சேவை பாதிப்பால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு இண்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
விமானிகளுக்கான புதிய விதிமுறைகள், ஊழியர்கள் பற்றாக்குறை, மோசமான வானிலை, பயணிகள் நெரிசல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
விசித்திரமான வரவேற்பு நிகழ்ச்சி
பங்கு விலை வீழ்ச்சி
புதிய விதிகள் வாபஸ்
