sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நகராட்சிகளுக்கு பதில் நிதியை அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்குங்கள்; தெரு நாய் விவகாரத்தில் சசிதரூர் யோசனை

/

நகராட்சிகளுக்கு பதில் நிதியை அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்குங்கள்; தெரு நாய் விவகாரத்தில் சசிதரூர் யோசனை

நகராட்சிகளுக்கு பதில் நிதியை அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்குங்கள்; தெரு நாய் விவகாரத்தில் சசிதரூர் யோசனை

நகராட்சிகளுக்கு பதில் நிதியை அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்குங்கள்; தெரு நாய் விவகாரத்தில் சசிதரூர் யோசனை

3


ADDED : ஆக 13, 2025 09:30 PM

Google News

3

ADDED : ஆக 13, 2025 09:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாய் மேலாண்மைக்கான நிதியை நகராட்சிகளுக்கு பதிலாக நம்பகமான விலங்கு நல அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்து உள்ளார்.

தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதேப்போல், காங்கிரஸ் எம்பி சசி தரூர், டில்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சசி தரூர் கூறியதாவது: ஒவ்வொரு நகரத்திலும் உள்ள சாதாரண குடிமக்களைப் பாதிக்கும் பிரச்னைக்கு இது ஒரு சிந்தனைமிக்க பதில்.

நாய்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும்போது மனிதர்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால், நமது அமைப்பில் உள்ள குறைபாடு வளங்களின் பற்றாக்குறை அல்ல, மாறாக நிதி வழங்கப்பட்டிருந்தாலும் கூட, தெருநாய்களைச் சுற்றி வளைத்து கருத்தடை செய்யும் பணியைச் செய்ய நகராட்சிகள் விருப்பமின்மை அல்லது இயலாமை என்பதை யாரும் குறிப்பிடவில்லை.

இந்த நிதி உண்மையில் தேவைப்படும் இடங்களில் செலவிடப்படுவதில்லை. தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

நாய் மேலாண்மைக்கான நிதியை நகராட்சிகளுக்கு பதிலாக நம்பகமான விலங்கு நலஅமைப்புகளுக்கு வழங்க வேண்டும். இவர்கள் திட்டத்தை நன்கு செயல்படுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us