sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளாவில் எஸ்.ஐ.ஆர்., காலக்கெடுவை வரும் 31 வரை நீட்டிக்க அறிவுறுத்தல்

/

கேரளாவில் எஸ்.ஐ.ஆர்., காலக்கெடுவை வரும் 31 வரை நீட்டிக்க அறிவுறுத்தல்

கேரளாவில் எஸ்.ஐ.ஆர்., காலக்கெடுவை வரும் 31 வரை நீட்டிக்க அறிவுறுத்தல்

கேரளாவில் எஸ்.ஐ.ஆர்., காலக்கெடுவை வரும் 31 வரை நீட்டிக்க அறிவுறுத்தல்


ADDED : டிச 19, 2025 12:15 AM

Google News

ADDED : டிச 19, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேரளாவில், எஸ்.ஐ.ஆர்., நடைமுறைகளை வரும், 31ம் தேதி வரை நீட்டிப்பதை பரிசீலிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி , உத்தர பிரதேசம் உள்ளிட்ட 1 2 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செ ய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலை சுட்டிக்காட்டி இந்த பணிகளை நீட்டிக்க உத்தரவிடக்கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ''வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தேர்தல் ஆணையத்தின் அவசர நடவடிக்கையால், 25 லட்சம் பேர் நீக்கப்படும் அபாயம் உள்ளது.

''உள்ளாட்சித் தேர்தல் நடந்ததால், பலரால் இன்னமும் விண்ணப்பம் வழங்க முடியவில்லை. எனவே காலக்கெடுவை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்,'' என, வலியுறுத்தினார்.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், 'இது சம்பந்தமான கோரிக்கைகளை கேரள அரசு தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக வழங்கலாம். ''விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்குவதற்கான காலக்கெடுவை வரும் 31 வரை நீட்டிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை ஜன., 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

- டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us