sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போதிய ஆதாரம் இல்லை : குண்டு வெடிப்பு குற்றவாளி விடுதலை

/

போதிய ஆதாரம் இல்லை : குண்டு வெடிப்பு குற்றவாளி விடுதலை

போதிய ஆதாரம் இல்லை : குண்டு வெடிப்பு குற்றவாளி விடுதலை

போதிய ஆதாரம் இல்லை : குண்டு வெடிப்பு குற்றவாளி விடுதலை


UPDATED : பிப் 29, 2024 09:04 PM

ADDED : பிப் 29, 2024 08:58 PM

Google News

UPDATED : பிப் 29, 2024 09:04 PM ADDED : பிப் 29, 2024 08:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர் : ரயில் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீமை, போதிய ஆதாரம் இல்லாததால் அஜ்மீர் தடா நீதிமன்றம் விடுதலை செய்தது.

உத்தர பிரதேசம் அயோத்தியில் கடந்த 1992ம் ஆண்டு டிச., 6 ல் பாபர் மசூதி, இடிக்கப்பட்டது.இதன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, பயங்கரவாதிகள் 1993ல் ரயில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர்.

உத்தர பிரதேசத்தின் லக்னோ, கான்பூர், தெலுங்கானாவின் ஹைதராபாத், குஜராத்தின் சூரத், மஹாராஷ்டிராவின் மும்பை ஆகிய இடங்களில் ஐந்து ரயில்களில் நடந்த குண்டு வெடிப்பில், இருவர் பலியாகினர்; 22 பேர் காயமடைந்தனர்.இந்த வழக்கில், 20 பேர் மீது சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த ஒன்பது பேர் மீதும்

வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில், குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேருக்கு தடா நீதிமன்றம் 2004ல் ஆயுள் தண்டனை விதித்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நான்கு பேரை விடுவித்ததுடன் மீதமுள்ளவர்களுக்கு தண்டனையை உறுதி செய்தது.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் எனப்படும் துண்டா, 2013ல் நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டார்.

இர்பான், ஹமீதுதீன் ஆகியோரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் தண்டனை தொடர்பான வழக்கு அஜ்மீர் தடா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில், சி.பி.ஐ., தரப்பில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், முக்கிய குற்றவாளியான அப்துல் கரீமை நீதிமன்றம் விடுதலை செய்வதாக அறிவித்தது. இர்பான், 70, மற்றும் ஹமீதுதீன், 44, ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டாலும், பார்லிமென்ட் தாக்குதல் உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளதால் அப்துல் கரீமின் சிறைவாசம் தொடர்கிறது.






      Dinamalar
      Follow us