sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏரியில் மிதந்த இளம்பெண் உடல் ஆணவ கொலையா என விசாரணை

/

ஏரியில் மிதந்த இளம்பெண் உடல் ஆணவ கொலையா என விசாரணை

ஏரியில் மிதந்த இளம்பெண் உடல் ஆணவ கொலையா என விசாரணை

ஏரியில் மிதந்த இளம்பெண் உடல் ஆணவ கொலையா என விசாரணை


ADDED : பிப் 13, 2025 05:14 AM

Google News

ADDED : பிப் 13, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனேக்கல்: ஹுஸ்கூர் ஏரியில் இளம்பெண் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இவரை, தந்தையே ஆணவ கொலை செய்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

பெங்களூரு ரூரல், ஆனேக்கல்லின் ஹுஸ்கூர் கிராமத்தில் வசிப்பவர் ராமமூர்த்தி, 48. இவரது மகள் சஹனா, 20. இவரும், அதே கிராமத்தில் வசிக்கும் நிதின், 24, என்பவரும் ஓராண்டாக பரஸ்பரம் காதலித்தனர். மூன்று நாட்களுக்கு முன் தான், மகளின் காதல் விவகாரம் ராமமூர்த்திக்கு தெரிந்தது.

மகளின் காதலை கடுமையாக எதிர்த்ததால், பிரச்னை ஆரம்பமானது. நிதினை விட்டு விலகும்படி மகளை கட்டாயப்படுத்தினார். ஆனால், சஹனா தன் காதலில் உறுதியாக நின்றார். 'நிதினையே திருமணம் செய்து கொள்வேன்' என, பிடிவாதம் பிடித்தார்.

இதற்கிடையே, மகளின் காதலர் நிதினை போனில் தொடர்பு கொண்ட ராமமூர்த்தி, பேச்சு நடத்த பெற்றோருடன் வரும்படி அழைத்தார். ராமமூர்த்தியின் நண்பர் வீட்டில், நேற்று முன்தினம் இரவு பேச்சு நடந்தது. சஹனாவும் வந்திருந்தார்.

அப்போது, மகளை தன் அக்காவின் மகனுக்கு திருமணம் செய்ய விரும்புவதாக, ராமமூர்த்தி கூறியுள்ளார். இதற்கு சஹனா சம்மதிக்கவில்லை. அவரை தந்தை சரமாரியாக தாக்கியுள்ளார். 'உயிர் போனாலும் காதலை கைவிட மாட்டேன்' என, சஹனா தெரிவித்துள்ளார்.

நிதினின் தாய் மன்றாடியும், ராமமூர்த்தி திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இரண்டு நாட்கள் கால அவகாசம் கேட்டு விட்டு, மகளை அழைத்து கொண்டு பைக்கில் புறப்பட்டார். ஏரி பாதையில் செல்லும் போது, பைக் ஏரியில் விழுந்துள்ளது. சஹனாவும், தந்தையும் நீரில் விழுந்தனர்.

மகளை காப்பாற்ற முயற்சிக்காத தந்தை, அங்கிருந்து நேரடியாக ஹெப்பகோடி போலீஸ் நிலையத்துக்கு வந்து, பைக் ஏரியில் விழுந்ததாக கூறினார். அங்கு சென்ற போலீசார், ஏரியில் மூழ்கி உயிரிழந்த சஹனாவின் உடலை வெளியே எடுத்தனர்.

'இது விபத்து அல்ல, மகளை தந்தையே ஏரியில் தள்ளி ஆணவ கொலை செய்துள்ளார்' என, அவரது காதலர் நிதின் புகார் அளித்துள்ளார்.

எனவே போலீசார், சஹனாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அதன் அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். ராமமூர்த்தியிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us