sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆபாச அர்ச்சனைக்கு ஆளான பெண் அதிகாரியிடம் விசாரணை

/

ஆபாச அர்ச்சனைக்கு ஆளான பெண் அதிகாரியிடம் விசாரணை

ஆபாச அர்ச்சனைக்கு ஆளான பெண் அதிகாரியிடம் விசாரணை

ஆபாச அர்ச்சனைக்கு ஆளான பெண் அதிகாரியிடம் விசாரணை


ADDED : பிப் 13, 2025 05:19 AM

Google News

ADDED : பிப் 13, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொக்கா: மணல் கடத்தலை தடுக்க சென்று, ஆபாச அர்ச்சனைக்கு ஆளான பெண் அதிகாரியிடம், போலீசார் விசாரணை நடத்தினர்.

ஷிவமொக்கா மாவட்ட கனிம வள அதிகாரி ஜோதி. இவர், கடந்த 10ம் தேதி இரவு பத்ராவதி சீகேபாகி பகுதியில் இருந்து, சட்டவிரோதமாக லாரியில் மணல் கடத்தப்படுவதை தடுக்க சென்றார். அப்போது அவரிடம் மொபைல் போனில் பேசிய ஒருவர், ஆபாசமாக பேசினார். அந்த நபர் பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சங்கமேஸ்வர் மகன் பசவேஸ் என்று கூறப்படுகிறது. ஆனால் எம்.எல்.ஏ.,வும், அவரது மகனும், இதை மறுத்து உள்ளனர்.

ஜோதி அளித்த புகாரில், பத்ராவதி பழையநகர் போலீசார் நேற்று முன்தினம் மூன்று பேரை கைது செய்தனர். நேற்று காலை பத்ராவதி டி.எஸ்.பி., நாகராஜ் முன், ஜோதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். பின், கலெக்டர் அலுவலகம் சென்றார். கலெக்டர் குருதத் ஹெக்டேயை சந்தித்து அரை மணி நேரம் பேசினார்.

சம்பவம் குறித்து விளக்கம் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த வழக்கில் இருந்து பசவேசை தப்பிக்க வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுவதாக, எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.






      Dinamalar
      Follow us