sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இரும்பு ஆலையில் விபத்து: 25 பேர் கதி என்ன?

/

இரும்பு ஆலையில் விபத்து: 25 பேர் கதி என்ன?

இரும்பு ஆலையில் விபத்து: 25 பேர் கதி என்ன?

இரும்பு ஆலையில் விபத்து: 25 பேர் கதி என்ன?


ADDED : ஜன 10, 2025 12:43 AM

Google News

ADDED : ஜன 10, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ப்பூர்,

சத்தீஸ்கரின் முங்கேலி பகுதியில் உள்ள இரும்பு ஆலையின் புகைப்போக்கி இடிந்து விழுந்தது; இடிபாடுகளில், 25 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டம் சரகான் பகுதியில் இரும்பு ஆலை கட்டுமானப் பணி நடந்து வருகிறது. நேற்று, இங்கு தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலையின் புகைப்போக்கி திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

கட்டட இடிபாடுகளில் சிக்கி இருவர் காயம் அடைந்தனர். 25க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் காயம் அடைந்த இருவரையும் மீட்டு பிலாஸ்பூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடக்கிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us